பாமக சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் - ராமதாஸ் பேட்டி
சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் சென்னை மாவட்ட பாமக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழலில் திளைக்கின்றனர்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போயிருக்கிறது என ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவை பற்றி நான் விமர்சித்தை இருட்டடிப்பு செய்கின்றன. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பெயிட் நியூஸ் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, தேர்தலில் தனித்து களம் இறங்க துணிச்சல் இல்லாதவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறிய அவர். அந்த கூட்டணி வலுவிழந்தது என்றும் கூறினார். மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை நிறுத்தும் மே மாதம் பாமக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் வண்டலூரில் வருகிற 27ம் தேதி மாநாடு கண்டிப்பாக நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications