ஸ்கிரிப்ட்ல எழுதி கொடுப்பதை செய்து வருகிறார் ஸ்டாலின்: ராமதாஸ் தாக்கு
சென்னை: திமுக பொருளாளர், ஸ்டாலின் எழுதி கொடுத்தபடி நடித்துவருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 'நமக்கு நாமே' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் திருச்சி சென்றபோது, அவரது நிகழ்ச்சிகளை செய்தி சேகரிப்பதற்காக சுமார் 15க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அவர் தங்கில் ஹொட்டல் முன்பு குவிந்திருந்தனர்.
இந்நிலையில், காலை சுமார் 8.45 மணிக்கு சுற்றுப்பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் அவரது காரில் செல்ல, அவரது கட்சியினர் கட்சியினர் காரும் பின் பத்திரிகையாளர்கள் வேன் பின் தொடர்ந்தது.
அவர் ஜே.ஜே. கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் சென்ற பத்திரிகையாளர்களின் வேனின் டயர் வெடித்துள்ளது. வேன் தடுமாறி ஓடியதால், பத்திரிகையாளர்கள் பயந்து அலறியுள்ளனர். ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு வேனை நிறுத்தியுள்ளார்.
அதேநேரம், மணப்பாறை சென்ற ஸ்டாலின் அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அதே வழியாக வந்த போது பத்திரிகையாளர்கள் அவரது காரை நிறுத்துமாறு கைகாட்டியுள்ளனர். ஆனால், ஸ்டாலின் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
வேன் விபத்து: பத்திரிகையாளர்களுக்கு உதவாத ஸ்டாலின் - அவர் என்ன பண்ணுவார்... இந்த சீன் ஸ்கிரிப்ட்ல இருந்திருக்காது!
— Dr S RAMADOSS (@drramadoss) October 3, 2015
இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "வேன் விபத்து: பத்திரிகையாளர்களுக்கு உதவாத ஸ்டாலின் - அவர் என்ன பண்ணுவார்... இந்த சீன் ஸ்கிரிப்ட்ல இருந்திருக்காது!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் எழுதி கொடுத்தபடி நடந்து வருவதாகவும், திடீரென ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு ரிப்ளே செய்ய ஸ்டாலினுக்கு தெரியவில்லை என ராமதாஸ் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.