பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர்களுக்கு ஆதரவாக எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக வழக்கு விசாரணை ஆணையத்திற்கு உள்ளே செல்கிறது இது அநீதி ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார்.
அண்மையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு வழக்கறிஞர், ராஜீவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது.
இவர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்திருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்தால் மோசமான முன்னுதாரணமாகிவிடும். அதே போல, ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஏனென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்திருக்கிறார்கள் என்று வாதிட்டார்.
இந்நிலையில்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications