புதுச்சேரியில் மதுக்கடைகள் நேரம் குறைக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை
புதுவை: மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, சாலையோரங்கள் மதுக்கடைகள் மூடப்படும் மது மற்றும் போதையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுவை சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முதல் வேட்பாளர் பட்டியல் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என பாமக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி
இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்:
காரைக்கால் தெற்கு : மஸ்தான்
நெடுங்காடு : முனியசாமி
முத்தியால்பேட்டை : கோபி
மங்கலம் : மதியழகன்
காலாப்பட்டு : செல்வராசு
இந்திரா நகர் : வடிவேல்
திருநள்ளாறு : தேவமணி
மணவெளி : முருகன்
மண்ணாடிப்பட்டு ; வெங்கடேசன்
நெட்டப்பாக்கம் : சுப்பிரமணியன்
நெல்லித்தோப்பு : புருஷோத்தமன்
அரியாங்குப்பம் : லட்சுமணன்
தட்டாஞ்சாவடி : முருகசாமி
ராஜ்பவன் : பண்டியராஜன்
லாஸ்பேட்டை : முரளி கிருஷ்ணா
உழவர்கரை ; முருகன்
காரைக்கால் வடக்கு : ஜெயகணேஷ்
மாகி : சாஜி குமார்
உருளையன்பேட்டை : சுப்பிரமணியன்
டி.ஆர்.பட்டினம் ; துரை
ஊசுடு : குமரேசன்
திருபுவனை : சுனிதா
பாகூர் : வேணுகோபால்
இதனிடையே புதுச்சேரியில் பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, சாலையோரங்கள் மதுக்கடைகள் மூடப்படும் மது மற்றும் போதையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மதுவிலக்கு அமல்படுத்தப்படும். புதுச்சேரியில் வார்டுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாமக கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications