பாமக 'சோலாவா' 70% வாக்குகள் வாங்கிடும்... டாக்டர் ராமதாஸ் 'அடேங்கப்பா' நம்பிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே 70% வாக்குகளை வாங்கிவிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் 205 தொகுதியை வெல்வோம் என்றேன். ஆனால் இங்கு நடைபெறும் அறிமுக கூட்டத்தில் பார்க்கும் போது 208 தொகுதிகள் கட்டாயம் வெல்வோம் என தெரியவருகிறது.

தமிழகத்தில் 70% வாக்குகள் பா.ம.க.வுக்குதான் கிடைக்கும். நாளுக்கு நாள் பா.ம.க. வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்து வருகின்றது. புதியதாக வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் தாய்மார்கள் மத்தியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் சொன்னதை செய்வார் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற மக்களின் மனதில் பதிந்துள்ளது.
கடந்த 2015 பிப்ரவரியில் செயற்குழு கூட்டம் நடைபெற்று முதலமைச்சர் வேட்பாளாராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யபட்டதில் இருந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு வேலை செய்கின்றவர்கள், மகளிர் குழுகளை சந்தித்து அறிமுகபடுத்திகொண்டு மக்களின் தேவைகளை குறித்து மாற்றத்தை கொண்டு வருவதை விளக்கினார். அதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தாய்மார்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை பா.ம.க.தான் கொண்டு வரமுடியும் என நம்புகின்றனர்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்,












Click it and Unblock the Notifications