காமராஜர் ஆட்சியை கொடுக்கும் தகுதி பாமகவிற்கு மட்டுமே உண்டு: டாக்டர் ராமதாஸ்
கோவை: தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது என கோவை கொங்கு மண்டல மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அக்கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பேசும் போது இரவு பத்தரை மணி. நேரமின்மையாலோ என்னவோ அமைதியாக ஆரம்பித்து சுருக்கமாக முடித்துக்கொண்டார். பேசியது குறைவுதான் என்றாலும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சி என்று கூறி அதிர்ச்சி அட்டாக் கொடுத்தார்.

மலிவான அரசியல்
தமிழகத்தை 50 ஆண்டுகாலம் ஆண்ட இரு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டனர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகாலம் அதிமுக ஆண்டிருக்கிறது. 22 ஆண்டுகாலம் திமுக ஆட்சி செய்திருக்கிறது. திமுகவினர் காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. நிறத்தைப் பார்த்து அண்டங்காக்கா என்று அநாகரீகமாக பேசினார்கள். மலிவான அரசியல் செய்கிறார்கள் என்றார்.

காமராஜர் ஆட்சி
யார் யாரோ காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

திரும்பி பார்க்கிறார்கள்
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் எங்களை திரும்பி பார்க்கிறார்கள். யார் இந்த அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாட்டில் பேசக் கூடிய அளவிற்கு, விவாதிக்கக் கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கின்றோம். இனி வரும் காலங்களிலும் மேலும் அன்புமணி பேசப்படுவார். அவருடைய திட்டங்கள், கொள்கைகள் பற்றி சாதாரண மனிதன் முதல் படித்தவர்கள் வரை பேசக் கூடிய நிலை வரும்.

மது இல்லா தமிழகம்
மதுக்கடைகளை மூடுவோம் என்று இரு திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவார்களா. நாங்கள் சொல்லுகிறோம். மக்களுடைய வாக்குகளை, பெண்களுடைய வாக்குகளை கவருவதற்காக நாங்கள் சொல்லவில்லை. இதனை 30 ஆண்டு காலமாக சொல்லி வருகிறேன். மது இல்லா தமிழகம் என போராடி வருகிறேன். மக்களே மாற்றத்தை விரும்புங்கள். மாற்றத்தை நோக்கி செல்லுங்கள் என்றும் கூறி தனது உரையை முடித்தார் டாக்டர் ராமதாஸ்
-
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications