போயஸ் கார்டன் சொத்து ஜெ.வின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம்.. டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அவரின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது என டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி. தினகரன் கூறுகையில், " ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்து சென்றதும், அவரை யார் அழைத்து வந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. டி.வி.சேனல் செய்திகளில் பார்த்துதான் அங்கு என்ன நடந்தது என்பதை நான் அறிந்தேன்.

ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் எங்களுக்கு கோவில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர். அவரது சொத்தை எடுத்து கொள்வதற்கு நான் யார்?
ஜெயலலிதாவின் வீட்டில் அவருடைய நேர்முக உதவியாளர் பூங்குன்றன் 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த ராஜம் மற்றும் சிலரே உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரே ஒரு தடவை மட்டும் நான் அங்கு சென்று வந்தேன்.
நான் ஏன் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
அப்படி இருக்க, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப் படியான வாரிசு என்பதை அவர் தெரிவித்து அந்த சொத்துக்களை எடுத்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications