மக்கள் கண்ணீர் அஞ்சலி.. சொந்த ஊர் போடியில் கவிஞர் நா.காமராசன் உடல் தகனம்- வீடியோ

சென்னையில் கந்த புதன்கிழமை காலமான கவிஞர் நா.காமராசனின் பூத உடல் அவரது சொந்த ஊரான போடியில் தகனம் செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

தேனி: சென்னையில் கடந்த புதன்கிழமையன்று காலமான கவிஞர் நா.காமராசனின் உடல் அவரது சொந்த ஊரான போடியில் தகனம் செய்யப்பட்டது. கவிஞரின் இறுதிச்சடங்கில் பலர் கலந்துகொண்டனர்.

கவிஞர் நா.காமராசன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். புதுக்கவிதை எழுதும் இன்றைய கனிஞர்களுக்கு முன்னோடி. எம்ஜிஆரின் பாராட்டைப் பெற்ற கவிஞர். பல திரைப்பட பாடல்களை எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோருக்கு எழுதியுள்ளார்.

Poet Na.Kamarasan funeral held at Bodi, his native place

இவருடைய கவிதை நூலான கருப்பு மலர்கள் இலக்கிய உலகில் அதிக கவனத்தை ஈர்த்த நூல். அதிமுகவில் இருந்த கவிஞர், பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். முதுமையின் காரணமாக உடல்நிலை குன்றியிருந்த அவர் கடந்த புதன்கிழமை அன்று உயிரிழந்தார்.

அதன்பிறகு அவருடைய பூத உடல், சொந்த ஊரான போடிக்கு எடுத்துசெல்லப்பட்டு நேற்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யபப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+