சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண் கவிஞர் திலகபாமா கைது!
சிவகாசியில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் கவிஞர் திலகபாமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி: கவிதா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைக்கு தீ வைத்த கவிஞர் திலகபாமா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி கவிதா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் டாஸ்மாக் கடையில் இருந்து மேஜை, நாற்காலி மற்றும் மது பாட்டீல்களை வெளியே வீசி தீ வைத்து எரித்தனர். கடைக்குள்ளும் அவர்கள் தீவைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுக்கடைக்கு தீ வைத்ததற்காக கவிஞர் திலகபாமா உள்ளிட்ட பெண்கள் 14 பேரையும், ஆண்கள் 7 பேரையும் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடும் பெண்களைக் கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் சிவகாசியில் கைது சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications