சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு போடப்பட்ட பூட்டை போராடி உடைத்த போலீஸ்!
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த பூட்டை போலீஸார் போராடி உடைத்தனர். இதனால் வாகனங்கள் செல்கின்றன.
சென்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கிண்டி கத்திபாரா பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த பூட்டை போலீஸார் போராடி உடைத்தனர்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததை கண்டித்து, சென்னையின் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் மாணவர், இளைஞர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சென்னையின் பெரும் பகுதியின் போக்குவரத்தே முடங்கியது. எஸ் வடிவத்தில் உள்ள இந்த மேம்பாலம் முழுவதும் இரு புறமும் சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை கைவிடும்படி போலீஸார் கூறியும் போராட்டக்காரர்கள் கேட்காததால், போலீஸார் வலுக்கட்டாயமாக பூட்டை உடைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பூட்டை உடைத்ததால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது..












Click it and Unblock the Notifications