கரூரில் ரயில் பாதையில் இருந்த தாமிர வயர்களைத் திருடிய நால்வர் கைது- வீடியோ
கரூர் - திருச்சி ரயில் பாதையில் மின்பாதைக்காக வைக்கப்பட்ட தாமிர வயர்களைத் திருடிய நால்வரை பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ரயில் பாதையில் இருந்த தாமிர கம்பிகளை திருடிய நான்கு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் அருகேயுள்ள மாங்காசோலிபாளையம் அருகே ரயில் பாதையில் நான்கு பேர் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரயில் பாதைகளில் இருக்கும் தாமிர வயர்களைத் திருடி விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களை சோதனை செய்ததில் பல தாமிர கம்பிகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி-கரூர் ரயில்பாதையை மின்பாதையாக மாற்றும் வேலை நடந்து வருகிறது. அதில் அப்பாதையில் இருக்கும் தாமிர கம்பிகள் மின்பாதை பணிக்காக போடப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் இந்த நால்வரும் தாமிர கம்பிகளை திருடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications