சென்னை சில்க்ஸ் தீ விபத்து.. கமிஷனர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி தற்போது வரை நடந்து வருகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தை சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications