ஒரு சாதாரண சட்டசபைக் கூட்டத்திற்காக.. இப்படியா அமைதி வழியில் போராடுபவர்களை விரட்டுவது?
சட்டசபை கூட்டம் இன்று கூட உள்ளதால், மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் கலைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்துள்ளனர்.
சென்னை: சட்டசபை கூட்டம் இன்று கூட உள்ளது. கடற்கரை சாலை வழியாகத்தான் அமைச்சர்கள் செல்ல வேண்டும். அப்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்க போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அப்புறப்படுத்த காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் அறிவித்து வருகின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனை ஏற்க மறுத்து கடலுக்குள் மாணவர்கள் சென்று புதுவிதமான போராட்டத்தை கையில் எடுத்தனர்.
Tamil Nadu: Protesters sing national anthem 'Jana Gana Mana' as police try to remove them from Chennai's Marina Beach #Jallikattu pic.twitter.com/TFkzvKtKkP
— ANI (@ANI_news) January 23, 2017
தொடர்ந்து வெளியேற மறுத்து மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications