கண்ணீர் புகைக்கும் பயப்படாத தூத்துக்குடி மக்கள்.. ஆவேசத்துடன் முன்னேற்றம்.. போலீஸ் ஓட்டம்
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர். இதையடுத்து அவர்கள் பதிலுக்கு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
கலவரத்தடுப்புக்காக கொண்டுவரப்பட்ட வஜ்ரா வாகனத்தை கண்டும் தூத்துக்குடி மக்கள் பயப்படவில்லை. கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசியபோதும், அதை எதிர்த்து மக்கள் முன்னேறினர். வஜ்ரா வாகனத்தை விரட்டியடித்தபடியே பொதுமக்கள் முன்னேறினர்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆவேசத்தோடு முன்னேறி வந்ததால், போலீஸ் அங்கிருந்து இடத்தை காலி செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கண்ணீர் புகை குண்டு உள்ளிட்ட எந்த தாக்குதலையும் பார்த்து தூத்துக்குடி மக்கள் பயப்படவில்லை.
தங்களை நிரந்தரமாக கொல்லும் ஸ்டெர்லைட் ஆலை கழிவு பிரச்சினையை ஒழித்து கட்டுவதே ஒரே நோக்கம் என்ற ஆவேசத்துடன் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முன்னேறி செல்கிறார்கள்.
போலீசாரே பயந்து பின்வாங்கிவிட்டதால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.