கொசுவலை தராததால் உண்ணாவிரதத்தில் குதித்த பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்
வேலூர்: கொசு வலை கேட்டும் அதை சிறை அதிகாரிகள் தராததால் கோபமடைந்த இந்து பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் சாப்பிட மறுத்து தட்டை தூக்கி எறிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உள்ளிட்ட சில இந்துப் பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பக்ருதீன், பில்லா மாலிக், பன்னா இஸ்மாயில். இவர்கள் 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் கடந்த 16-ந்தேதி பெங்களூர் அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர், தங்களை அடைத்து வைத்துள்ள அறையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும். இதனால் தங்களுக்கு கொசுவலை ஏற்பாடு செய்து தரும்படியும் சில நாட்களாக கேட்டு வந்துள்ளனர். ஆனால் கொசுவலை தரமுடியாது என ஜெயிலர் கூறியுள்ளாராம்.
இதனைக் கண்டித்து 3 பேரும் நேற்று இரவு அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்தனர். மேலும் உணவு வைத்திருந்த தட்டை வீசி எறிந்துள்ளனர். அதேபோல் இன்று காலை வழங்கப்பட்ட உணவையும் அவர்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications