அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக புகார்: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதி பெறாத இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ததாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி மலர்ந்துள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார்.

Chinese Vice President Li Yuanchao meets PM Modi

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா கடந்த 17ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அக்கட்சியினர் தாளமுத்து நகர் வழியாக செல்ல அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அங்கு பேசுவதற்காகவும், பிரசாரம் செய்யவும் அனுமதி பெறவில்லை.

இந்த நிலையில் 17ம் தேதி அந்த வழியாக பிரேமலதா வந்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். இதுகுறித்து அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவசுப்பிரமணியன் தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் பிரேமலதா மீது தேர்தல் வீதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் பிரச்சாரம் செய்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தேமுதிகாவை சேர்ந்த நடிகர் ராஜேந்திரநாத் மீது தென்பாகம் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+