பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சொத்து அபகரிக்க முயற்சி - திருச்சி சாமியார் மீது வழக்கு
பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சொத்தை அபகரிக்க முயன்ற திருச்சி சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி : ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் இருந்து சொத்தைப் பறிக்க முயன்றதாக திருச்சி சிவராஜயோக ஆசிரமத்தைச் சேர்ந்த சாமியார் ரிஷி யோகி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சிவராஜயோக ஆசிரமத்தில் சாமியாராக இருப்பவர் ரிஷி யோகி. இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர், தன்னிடம் ஆசை வார்த்தை கூறி, சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார் என்று புகார் அளித்து இருந்தார்.

இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் தன்னிடம் வழிபாட்டுக்காக வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் இருந்து 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சாமியார் ரிஷி யோகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications