”நடிகையின் புகாரால் என் மீது பொய்வழக்கு போட்ட போலீசார்”- வங்கி ஊழியர் கமிஷனரிடம் புகார்!
சென்னை: சென்னையில் சினிமா நடிகை ஒருவர் அளித்த பொய்ப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது வங்கி ஊழியர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் செய்துள்ளார்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். வங்கி ஒன்றில் ஆலோசகராக உள்ள இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு சினிமா புதுமுக நடிகை அனுராதா என்பவர் தன் மீது பாலியல் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த பாண்டிபஜார் போலீசார் இரண்டு வருடங்கள் ஆன பிறகும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகை அனுராதா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 4 கோடி வரை மோசடி செய்துவிட்டதாகவும், அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காமல் அனுராதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications