தஷ்வந்தின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி போலீஸ் மனு.... தூக்கை எதிர்த்து கொடூரன் தஷ்வந்தும் மனு!
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்தின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை : சென்னை போரூர் அருகே 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று உடுமலை சங்கர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் தூக்கையும் நிறைவேற்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொடூரன் தஷ்வந்த் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் ஜாமினில் வெளிவந்த 10 மாதங்களில் தனது தாயையும் கொன்றுவிட்டு தலைமறைவானான்.
குற்றவாளி தஷ்வந்த்தை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு சென்னை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தஷ்வந்த்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 30 சாட்சியங்கள், 19 பொருள் சார்ந்த ஆவணங்களின் அடிப்படையில் அவனை குற்றவாளி என்று அறிவித்தார்.

தஷ்வந்த்துக்கு மரண தண்டனை
மேலும் தஷ்வந்த்துக்கு 46 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தஷ்வந்த் கோரி இருந்தான்.

தண்டனையை எதிர்த்து மனு
இந்நிலையில் தஷ்வந்த் தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளான். தனக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவன் மனுவில் கோரியுள்ளான்.

போலீஸ் மனு
இதனிடையே தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை விவகாரத்தில் திருப்பூர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹைகோர்ட் அனுமதி வேண்டும்
கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். இதன் அடிப்படையிலேயே இரண்டு வழக்குகளிலும் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி மனு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications