Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் போதை தலைக்கேறி.. 2 குழந்தைகளை பரிதவிக்க விட்டு ஓடிய தாய்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளகாதலுக்காக 2 குழந்தைகளை விட்டுட்டு ஓடிய தாய்- வீடியோ

    சென்னை: 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதல் தலைக்கேறி போனதால் வீட்டைவிட்டு வெளியே ஓடிப் போய் இருக்கிறார்.

    வேளச்சேரியை சேர்ந்த தம்பதி விஜய்ராஜேஷ்குமார், யாழினி தம்பதி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் யாழினி தஞ்சாவூரை சேர்ந்தவர். என்றாலும் யாழினி தரமணியில் உள்ள சட்டக்கல்லூயில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    2 பிள்ளைகள் பெற்றாலும் யாழினியை படிக்க வைக்க கணவன் மிகவும் விருப்பப்பட்டுள்ளார். யாழினி படிக்கும் அதே வகுப்பில் ரித்தீஷ் என்பவரும் படித்துள்ளார். இவர் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் என்பவரின் மகன் ஆவார். ரித்தீஷ்-ற்கும் வயது 30 ஆகிறது.

    ரித்தீஷ்-யாழினி காதல்

    ரித்தீஷ்-யாழினி காதல்

    ஒரே வகுப்பில் படிக்கும் ரித்தீஷ் - யாழினி-க்கு கள்ளக்காதல் பத்திக் கொண்டது. 2 வருடமாகவே இந்த உறவு வளர்ந்துள்ளது. யாழினி தன் கள்ளக்காதலை மூடி மறைக்க நிறையவே முயற்சி செய்தார். ஆனாலும் விஷயம் கணவன் விஜய்-க்கு தெரிந்துவிட்டது. மனைவியை கூப்பிட்டு அறிவுரை சொன்னார்... யாழினி கேட்கவில்லை. அதனால் கண்டிக்கவும் செய்தார்... அதையும் யாழினி கேட்கவில்லை. காலேஜூக்கு இனி போக வேண்டாம் என்று விஜய், சொன்னார்... அதையும் யாழினியை காதிலே போட்டுக் கொள்ளவில்லை. அதோடு விஜய்-யிடம் சண்டைக்கும் வந்து விட்டார்.

    யாழினி மாயம்

    யாழினி மாயம்

    இந்த பிரச்சனை இருவருக்கும் தகராறாக வெடித்து, இதுதான் சாக்கு என்று யாழினி இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு தஞ்சாவூருக்கு தன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி யாழினியை காணவில்லையாம். 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு எங்கே சென்றார் என தெரியவில்லையாம். இதனால், பல இடங்களில் விஜய் யாழினியை தேடி உள்ளார்.

    கணவன் புகார்

    கணவன் புகார்

    ஆனால் கிடைக்கவே இல்லை என்பதால், "மனைவியை காணவில்லை" என்று கணவர் விஜய் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மனைவி யாழினியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாயமான ரித்தீஷ், யாழினி, மற்றும் இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு உடந்தையாக இருந்த நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ஜீரணிக்க முடியவில்லை

    ஜீரணிக்க முடியவில்லை

    அபிராமி, நிலானி, யாழினி என்று கள்ளக்காதலில் விழுந்து தொலைக்கும் பெண்கள் தங்களை சீரழித்து கொள்வதுடன், சுமந்து பெற்ற தங்கள் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சேர்த்து சீரழிப்பதை ஜீரணிக்கவும் முடியவில்லை... மன்னிக்கவும் முடியவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+