ஐஎஸ் தீவிரவாதிகளுடன் முகநூலில் பேசியது ஏன்? கோவையில் கைதான நபர்களிடம் தொடர் விசாரணை
கோவை: ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் கேரளா, கோவை இளைஞர்கள் 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த ஞாயிற்று கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவர்கள் அபு பஷீர் என்பவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கோவையை சேர்ந்த இளைஞர்களிடம் ஐஎஸ் இயக்கம் குறித்து பிரச்சாரம் செய்து ஆள்சேர்ப்பில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையத்து பஷீருக்கு நண்பர்களான உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், ரகுமான் உள்ளிட்ட 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து 8 பேரிடமும், ரகசிய இடம் ஒன்றில் 3 பேரிடமும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
3வது நாளாக நேற்றும் தொடர்ந்த விசாரணையில் முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் படியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள அதிகாரிகள் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 4வது நாளாக இன்றும் இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications