ஐஎஸ் தீவிரவாதிகளுடன் முகநூலில் பேசியது ஏன்? கோவையில் கைதான நபர்களிடம் தொடர் விசாரணை
கோவை: ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் கேரளா, கோவை இளைஞர்கள் 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த ஞாயிற்று கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவர்கள் அபு பஷீர் என்பவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கோவையை சேர்ந்த இளைஞர்களிடம் ஐஎஸ் இயக்கம் குறித்து பிரச்சாரம் செய்து ஆள்சேர்ப்பில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையத்து பஷீருக்கு நண்பர்களான உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், ரகுமான் உள்ளிட்ட 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து 8 பேரிடமும், ரகசிய இடம் ஒன்றில் 3 பேரிடமும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
3வது நாளாக நேற்றும் தொடர்ந்த விசாரணையில் முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் படியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள அதிகாரிகள் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 4வது நாளாக இன்றும் இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications