வேகமாக முன்னேறி வரும் தினகரன்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீஸ்
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை தொடர்ந்து கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே மோதலை தடுக்கும் விதமாக போலீசார் முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் அரசியல் மாற்றம் நிகழப்போகிறதா இல்லையா என்பதற்கு அச்சாணியாக கருதப்படும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும் நிலையில் போலீசார் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை முதலே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்ப்பாராத வகையில் சில வாக்குகள் வித்தியாசத்திலேயே வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருவதால், அனைத்து தரப்பினரும் குறிப்பாக தொண்டர்களும் தேர்தல் முடிவை பரபரப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ, சுயேட்சியோ, பிரதான கட்சியோ என எந்த கட்சி வேட்பாளர் ஜெயித்தாலும், அதனை தாங்கிக்கொள்ள முடியாத பிற கட்சிகளின் தொண்டர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் இவ்வாறு செயல்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பல்வேறு முன்னேச்சரிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்.கே.நகரில் வெளிப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்களின் செயல்பாடுகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications