திருப்பூரில் எதிர்க்கட்சியினர் மீது போலீஸ் தடியடி... கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து
கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டை தட்டி கேட்டதால் திருப்பூரில் எதிர்க்கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதையடுத்து தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
Recommended Video

திருப்பூர்: கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேட்டை எதிர்க்கட்சியினர் தட்டி கேட்டதால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் தேர்தலை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கைத்தறி-துணிநூல், வீட்டுவசதி உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 18, 775 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

2018-ம் ஆண்டுக்கான கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் தேர்தல் 5 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தொடக்க நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் நிலையில் உள்ள 4 ஆயிரத்து 698 கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடந்தது.
அப்போது ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. கடும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான முதல்நிலை தேர்தலில் 4 ஆயிரத்து 366 கூட்டுறவு சங்கங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 31 சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பின்னர் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க சென்னை ஹைகோர்ட் கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திருவாரூர், நாகை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலை ஆணையர் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல் இன்று நடைபெற்று வந்தது. அதன் சங்கத்துக்குள் அதிமுகவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர் கூட்டுறவு சங்க முறைகேட்டை தட்டி கேட்டு மறியல் நடத்தினர். இதனால் அங்கிருந்த போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
பதற்றமான சூழல் நிலவுவதால் கூட்டுறவு சங்க தேர்தலை அதிகாரி ரத்து செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டுறவு தேர்தல் முறைகேட்டை தட்டி கேட்ட எதிர்க்கட்சியினர் மீது போலீஸ் தடியடி
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications