ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்ய டிடிவி தினகரனுக்கு போலீஸ் அனுமதி... இன்று மாலை பிரசாரம் தொடக்கம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள தினகரன் அணியினருக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய டிடிவி தினகரனுக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். இதையடுத்து அவர் தனது பிரசாரத்தை மாலை 5 மணிக்கு தொடங்குகிறார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக,பாஜக, நாம் தமிழர் கட்சியினர், தினகரன் அணியினர் என போட்டியிடுகின்றனர்.
இதில் அனைவரும் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால் தினகரன் தரப்பினர் இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை.
இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தினகரன் அணியினர் தவித்து வந்தனர்.
இன்று பிரசாரம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் அனுமதி கோரிய நிலையில் மீண்டும் தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தினகரன் அணியினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்ய தினகரனுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் தினகரன்.