நடிகர் கொலை வழக்கு: நடிகை கேரளாவில் பதுங்கல்- விரைந்தது தனிப்படை
நெல்லை: பாளையங்கோட்டையில் நடிகரை கொன்று புதைத்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகை கேரளாவில் பதுக்கியிருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.
நாங்குநேரி அருகேயுள்ள பரப்பாடியை சேர்ந்தவர் பீட்டர் பிரின்சோ. துணை நடிகரான இவர் பெங்களூரூவை சேர்ந்த ஸ்ரூதி சந்திரலேகா என்பவருடன் சென்னை மதுரவயலில் வசித்து வந்தார்.
இவர் துணை நடிகையாகவும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பீட்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பறிக்க திட்டமிட்டார்.
பீட்டரின் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி மதுராவயலில் கொலை செய்து அவரது உடலை பாளையங்கோட்டை ஆசிர்வாத நகரில் புதைத்தார். இதில் கூலிப்படையாக செயல்பட்ட பாளை செட்டிகுளத்தை சேர்ந்த ஆனட்ராஜ், பீ்ட்டர் பிரின்சோவின் நண்பர்களான பாளை சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி நாதன், ரபீக் உஸ்மான், ஜான் பிரின்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள நடிகை ஸ்ரூதி சந்திரலேகா, பீ்ட்டரின் நண்பர்களான உமா சந்திரன், நிர்மல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி சந்திரலேகா, அவரது கள்ள காதலன் உமா சந்திரன், நிர்மல் ஆகியோர் கேரளா மாநிலம் கொச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் இவர்கள் மூவரையும் கைது செய்ய தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications