கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியதே போலீஸ்தான்: பேராசிரியர் ஜெயராமன் பகீர் குற்றச்சாட்டு!
கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியது போலீசார் தான் என பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை: கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியது போலீசார் தான் என பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பேராசிரியர் ஜெயராமன் கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது தந்தை தங்கவேல் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜெயராமனுக்கு வரும் 26 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை அழைத்து வரப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிராமங்கலத்தில் காந்திய வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நாகை மாவட்டத்தில் 110 இடங்களில் எண்ணெய் கிணறுகளை தோண்ட தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய ஜெயராமன், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதிகள் பாலைவனமாக மாறக் கூடிய அபாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் கதிராமங்கலம் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டியவர்களே காவல்துறையினர் தான் என்றார்.












Click it and Unblock the Notifications