திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து சீமானுக்கும் குறி?
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
சேலம்: தமிழர் உரிமைகளுக்காக போராடிய திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தமிழ் உணர்வாளர்கள் பலரையும் அச்சுறுத்தி வருகிறது குண்டர் சட்டம். முதலில் திருமுருகன் காந்தி, பின்னர் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சீமான் மீது வழக்கு
கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதும் குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் போலீசார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம்
தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியினர் கடந்த 4-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பேசிய சீமான், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்; இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் பேசினார் என பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு சென்ற போலீசார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு
இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். தற்போது சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் குறி?
ஏற்கனவே மாணவி வளர்மதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததும் இதே சேலம் போலீஸ்தான். இதனால் சீமான் மீதும் குண்டர் சட்டம் பாயக் கூடும் என கூறப்படுகிறது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications