80 வயது முதியவரை வீதியில் வீசிய பிள்ளைகள்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 80 வயதான முதியவரை அவர் பெற்ற பிள்ளைகளே வீதியில் வீசி விட்டுச் சென்ற கொடுமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே உள்ள அம்பலத்தடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன். 80 வயதாகும் அவர் மரம் ஏறும் தொழிலாளி ஆவார். சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அடிபட்டதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடமாட்டம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தங்கையனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். பிள்ளைகள் தங்கையனின் சொத்துக்கள் மீது மட்டுமே பாசம் வைத்திருந்தனர். தங்கையன் நடமாட்டம் இல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டதால் அவரைப் பார்த்துக் கொள்ள முகம் சுளித்தனர். இந்த நிலையில் நெருக்கடி கொடுத்து அவரது சொத்துக்களை மகன்கள் இருவரும் தங்களது பெயர்களுக்கு மாற்றிக் கொண்டனர்.
இதையடுத்து தந்தையை இரு மகன்களும் உதாசீனப்படுத்த ஆரம்பித்தனர். அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்களாம். ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் தங்கையனை கொண்டு வந்து ரோட்டில் போட்டு விட்டனர் இரு பிள்ளைகளும். அவர் பயன்படுத்தி வரும் கட்டில் உள்ளிட்ட சாமான்களையும் எடுத்து வந்து ரோட்டில் வீசி விட்டனர்.
இது அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. உடனடியாக ஊர் மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்து தங்கையனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தங்கையனின் மகன்களிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications