அணிகள் இணைப்பு... அதிமுக அலுவலகம், ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிப்பு
ஜெயலலிதா சமாதியில் தொண்டர்கள் குவிந்ததை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்ற நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
நேற்றைய தினம் மாலை 4 மணி முதலே அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா சமாதி பரபரப்படைந்தது. ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வர உள்ளதாக தகவல் பரவியது.

இரண்டு தலைவர்களையும் வரவேற்க இரு அணி தொண்டர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். இதேபோல சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தொண்டர்களும் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications