சென்னை யு.எஸ். துணைத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 3 போராட்டங்கள் நடந்து விட்டன. சில மாதங்களுக்கு முன்பு கூட தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு அமைப்பினர் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இதனால்தான் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் இடமாற்றத்துக்குள்ளானதாக கூட கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது தேவ்யானி விவகாரம் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் சூடு பிடித்திருப்பதால் பாதுகாப்பை காவல்துறை அதிகரித்துள்ளது.
தூதரகத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகளும் போடப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications