தூத்துக்குடியிலிருந்து காரைக்குடிக்கு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.2.60 கோடி தங்கம் பறிமுதல்! இருவர் கைது
காரைக்கால்: தூத்துக்குடியிலிருந்து காரைக்காலுக்கு பஸ்சில் கடத்திவரப்பட்ட 8.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு தனியார் பஸ்சில் பெருமளவிற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காரைக்கால் அருகே பஸ்சை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 8.7 கிலோ மதிப்புள்ள தங்கம் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சமாகும்.
இந்த தங்கம் எங்கிருந்து கிடைத்தது, ஏன் காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த தங்கம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications