சிவகங்கை காவல் நிலையத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. பின்னணியில் ஷாக் தகவல்.. என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஜான் பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அவரது தற்கொலை முயற்சிக்கு பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ஜான் பிரிட்டோ. இந்நிலையில் தான் ஜான் பிரிட்டோ இன்று காவல் நிலையத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் ஜான் பிரிட்டோவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜான் பிரிட்டோ ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சாலை கிராமத்தில் நடந்த சட்டவிரோத மது விற்பனைக்கு ஜான் பிரிட்டோ உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக ஜான் பிரிட்டோவை எஸ்ஐ செல்வராஜ் பணியிடமாற்றம் செய்துள்ளார். அதாவது சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஜான் பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications