எய்ட்ஸ் பாதித்த வாலிபருக்கு திருமணம்… தடுத்து நிறுத்திய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தேனி: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் குடும்பத்தினர் அதனை மறைத்து திருமணம் செய்ய முயன்றனர். இதனை போலீஸ் தடுத்து நிறுத்தியதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வடக்கு தெரு பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த மாலாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்ட மணமகன் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது ஞாயிறு இரவு மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அவரது நண்பர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேனி போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு தேவதானப்பட்டிக்கு வந்தனர். அப்போது, மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்யப்போகும் மணமகளின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்' என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் வந்ததாக கூறினர். அவரது உத்தரவின் பேரில் இங்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் திருமணத்தை நிறுத்த இருவீட்டாரும் மறுத்தனர். உடனே, தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவை திருமண மண்டபத்திற்கு காவல்துறையினர் வரவழைத்து, ரமேஷின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் எச்.ஐ.வி. இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்தை இரு வீட்டாரும் நிறுத்தினர்.

எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் திருமணத்தை காவல்துறையினர் நிறுத்தியோடு, பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+