கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல தடை.. போலீசாரின் திடீர் நடவடிக்கையால் மன்னார்குடி கும்பல் பீதி
பதற்றம் நிலவி வரும் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் திடீரென தடை விதிக்கப்பட்டு மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையால் ரிசார்ட்டில் உள்ள மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது.
சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ள சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் தொடர்ந்து வெளியேற மறுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து கைகளில் லத்தியுடன் ஏராளமான போலீசார் மாலை முதலே குவிக்கப்பட்டு வருகின்றனர்.

ரிசார் பகுதியில் இருந்த பாதுகாப்பாளர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எம்எல்ஏக்களை தவிர மற்ற வெளியாட்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். அதற்கு பதிலாக மாற்று வழியில் வாகனங்கள் சென்று வருகின்றன.
போலீசாரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தடியடி நடத்தப்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications