மஞ்சுவிரட்டை தடுப்பதா.. சிவகங்கை அருகே போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு.. 4 போலீசார் காயம்
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில் 4 போலீசார் காயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் போலீஸ் வாகனம் உடைக்கப்பட்டு 4 போலீசார் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் இன்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது சிலர் கற்களை வீசியுள்ளனர். இதில் போலீசாரின் வாகனம் சேதமடைந்தது,
இதில் 4 போலீசார் காயமடைந்தனர். காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications