ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் பலி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ்காரர் ஒருவர் பலியாகினார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் நடந்த மஞ்சுவிரட்டின் போது காளை முட்டி காவலர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், அரசின் அனுமதியோடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 40 காளைகள் வரை களத்தில் சீறிப் பாய்ந்தன.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஜெய்சங்கர் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். திடீரென சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று காவலர் ஜெய்சங்கரின் கழுத்தில் மூட்டி தூக்கி வீசியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜெய்சங்கரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் அவசர கதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு வேலிகள் அமைக்கபட்டிருக்க வேண்டும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் அளவுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஆனால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாமல் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் உயரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications