ஆர்.கே.நகரில் போட்டியிட கணக்குப்பிள்ளை உதவியுடன் நூல்விட்ட எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை
ஆர்.கே.நகரில் போட்டியிட்டு அமைச்சராகலாம் என கனவு கண்டன எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையை மூவ்கள் இதுதானாம்.
சென்னை: இரட்டை இலை கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக கணக்குப் பிள்ளை உதவியுடன் எம்ஜிஆரின் செல்லப் பிள்ளை நூல்விட்டுப் பார்த்திருக்கிறார்.
எம்ஜிஆர் காலத்தில் சென்னையில் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். பின்னாளில் அரசியலில் அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைபாய்ந்தார்.

ஒருகட்டத்தில் மாநகரின் முக்கிய பொறுப்பும் கூட கிடைத்தது. இத்தனை ஆண்டு கால அரசியலில் இருந்தும் அமைச்சர் பதவி எதுவும் கிடைக்காத சோகம் செல்லப்பிள்ளைக்கு இருந்து வந்தது.
தற்போது இரட்டை இலை கிடைத்துவிட்ட நிலையில் நாமும் முயற்சிப்போம் என களமிறங்கினார் செல்லப் பிள்ளை. கணக்குப் பிள்ளை சொன்னால் கோட்டையார் கேட்பார் என கணக்குப் போட்டு காய்நகர்த்திப் பார்த்தார் அவர்.
ஆனால் கோட்டையாரோ ஏற்கனவே வெட்டு குத்துன்னு நிலவரம் கலவரமா இருக்கே... நீங்க தலையை கொடுத்தேதான் ஆகனுமா? என நைசாக கழற்றிவிட்டுவிட்டாராம். இதனால் செல்லப்பிள்ளை அமைதியாக ஒதுங்கிவிட்டாராம்.












Click it and Unblock the Notifications