மணல் மாபியா கூட்டாளியின் பிரியாணி தேசத்து ஹோட்டலை வாங்கி போட்ட அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.
மணல் மாபியாயின் கூட்டாளிகளில் ஒருவருக்கு சொந்தமான பிரியாணி தேசத்து சைவ ஹோட்டலை கணிசமாக தொகைக்கு வாங்கிவிட்டாராம் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.
சென்னை: தமிழக அரசியலையே அதிர வைக்கும் மணல் மாபியாயின் கூட்டாளிகளில் ஒருவருக்கு சொந்தமான பிரியாணி தேசத்து சைவ ஹோட்டலை கணிசமாக தொகைக்கு வாங்கிவிட்டாராம் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிழர் திருநாளில் கறிகஞ்சி ஹோட்டலாக அதை திறக்க ஜரூர் ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் அந்த எம்.எல்.ஏ.
சைக்கிளில் அளவையாராக நகர் வலம் வந்தவர்.. இன்று பிரியாணி தேசத்திலேயே ரூ1 கோடிக்கு கார் வைத்திருக்கும் ஒரே நபராக உருவெடுத்துவிட்டார். அத்தனை கட்சி தலைகளுக்கும் இவர்தான் அந்த நகரத்தில் ஒரே பினாமி.
இதன்விளைவாக மணல் மாபியாவுடன் சேர்ந்து சென்னை புழல் சிறையையும் பார்த்துவிட்டு வந்தார். இவர் புழல் சிறைக்கு போக, பிரியாணி தேசத்தில் தடபுடலாக திறந்த சைவ ஹோட்டல்தான் காரணம் என புரோகிதர்கள் கொளுத்திப் போட்டிருக்கின்றனர்.
இதனால் அந்த ஹோட்டலை இழுத்து மூடிவிட்டார் அண்ணன் அளவையார். இதை கேள்விபட்ட அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ., அண்ணனிடம் பேசி ஹோட்டலை வாங்கிவிட்டார்.
இப்போது இதை பிரமாண்டமான கறிகஞ்சி ஹோட்டலாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம் எம்.எல்.ஏ. இப்போது பிரியாணி நாட்டில் இதுதான் ஹைலெட் பேச்சுண்ணே...