திமுக கூட்டணியில் பொன். குமாருக்கு பண்ருட்டி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விவசாயிகள் தொழிலாளர் கட்சிக்கு பண்ருட்டி தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
பொன் குமார் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து பொன் குமார் பேசினார். அப்போது அக்கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்குவதாக திமுக தெரிவித்தது. இது திருப்தி தருவதாக பொன் குமாரும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை பொன் குமார் சந்தித்துப் பேசினார். அப்போது பொன் குமார் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடன்பாடு கையெழுத்தானது.
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பொன் குமார் பண்ருட்டியில் போட்டியிடுவார்.
அதிமுகவுடன் மோதல்
இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே சத்யா பன்னீர்செல்வம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications