திமுக கூட்டணியில் விவசாய தொழிலாளர் கட்சி - கருணாநிதியுடன் பேச்சு.. நாளை ஸ்டாலினுடன்!
சென்னை: திமுக கூட்டணியில் விவசாய தொழிலாளர்கள் கட்சி நீடிப்பதாகவும், கோமாவில் உள்ள அதிமுக ஆட்சியை நீக்கப் பாடுபடப் போவதாகவும் அக்கட்சித் தலைவர் பொன் குமார் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் பொன் குமார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று பொதுவான பிரச்சினைகள் குறித்து பேசினோம். நாளை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவுள்ளோம்.

விவசாய தொழிலாளர்கள் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும். தொகுதிகள் குறித்து நாளை பேசி முடிவெடுக்கப்படும்.
திமுகவுடன் கை கோர்த்து களப் பணியாற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறோம். திமுக தலைவர் கருணாநிதியால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியம் முடங்கிக் கிடக்கிறது. இதனால் இரண்டே முக்கால் கோடி தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காத நிலை நிலவுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications