சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைத்து சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளையும் ரயில்வே ஐஜியாக மாற்றப்பட்ட பொன். மாணிக்கவேல் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

இந்த விசாரணையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும் ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். அவருக்கு தேவையான அதிகாரிகளை தமிழக அரசு தர வேண்டும்.
சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் கும்பகோணம் நடுவர் நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்க வேண்டும். போலீசார் சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கையும் பொன். மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications