For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் செய்த துரோகம்தான் கருப்பு பணம் பதுக்கல்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு !

காங்கிரஸ் கட்சி செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல் என்றும் இதை சரி செய்யவே பிரதமர் மோடி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் தெரிவித்துள்ளனர்.

pon.Radhakrishnan Accusation on congress party

தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் சொல்வதைப் போல் கருப்பு பண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்று கூறுவது சரியல்ல. அது கருப்பு பண முதலாளிகள் ஆதாயம் பெற வழிவகுத்து இருக்கும். காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது. அவர் பிரதமர் மோடியை உணர்ச்சி வசப்பட்டு பேசுவது சரியல்ல.

காங்கிரஸ் செய்த துரோகம்தான் இந்த கருப்பு பண பதுக்கல். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை சரி செய்யவே பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
union minister Pon. Radhakrishnan's accusation on Congress regarding black money issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X