ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதலில் போராட்டம் நடத்தியது பாஜகதான்.. பொன் ராதாகிருஷ்ணன்
13 பேர் பலியான விவகாரத்தில் மக்களை குற்றம் சாட்டுகிறார் பொன். ராதாகிருஷ்ணன்
Recommended Video

கோவை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் போராட்டம் நடத்தியது பாஜகதான் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தூத்துக்குடிக்கு இப்பொது செல்லும் திட்டமில்லை. பொள்ளாச்சியில் நடைபெறும் மாநில செயற்குழுவில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்ல இருக்கிறேன். பா.ஜ.க சார்பில் தூத்துகுடி செல்வது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் போராடியது பா.ஜ.க. தான். தற்போது பல பேர் வேஷங்கள் போடுகின்றனர். இந்த ஆலை வரக்கூடாது என சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தியதும் பாஜகதான்.
ஆலைக்கு அன்று அனுமதி கொடுத்தல் உள்ளிட்டவை திமுக உட்பட மற்ற கட்சிகள் செய்த தவறு. தூத்துக்குடி சம்பவம் வருத்தம் அளிக்கிறது. பின்னணி குறித்து முழுமையாக தெரியாமல் பேச முடியாது. இருப்பினும் முழுமையாக ஆய்வுகள் செய்ய வேண்டும். காவல் துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இருக்க கூடியது.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications