இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்.. பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்
நாகர்கோவில்: இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி பற்றி பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பொது மக்கள் இதனை நம்ப வேண்டாம். திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதற்கும் ஜிஎஸ்டி-க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து திமுக அரசியல் செய்து வருகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தின் போது அரசு கேபிள் இணைப்புகளுக்கு இலவச செட்அப் பாக்ஸ் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பதில் கூறிய அவர், இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும், ஏழை, எளிய இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டங்கள் நடத்துபவர்கள் யார் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.