For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு! 'துக்கம் விசாரித்ததாக' தகவல்!!
சென்னை: மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இன்று தி.மு.க. தலைவர் கருணநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கருணாநிதியின் சகோதரி அண்மையில் மறைந்தது குறித்து துக்கம் விசாரிக்கவே வந்தேன். நடப்பு அரசியல் பற்றியோ, வேறு எந்த வழக்கு விவகாரங்கள் குறித்தோ பேசவில்லை
ஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பின்னர் உடனடியாக அவர் காரில் கிளம்பிச் சென்றுவிட்டார்.
Comments
English summary
Union Minister Pon Radhakrishnan met DMK leader Karunanidhi at his Gopalapuram residence. After Pon Ratha said he did not talked about any politics.
Story first published: Monday, May 25, 2015, 19:03 [IST]