வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கமலை கைது செய்ய சொல்வது வன்கொடுமை: பொன். ராதாகிருஷ்ணன்
நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை கைது செய்யச் சொல்வது வன்கொடுமை என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கமல்ஹாசனை கைது செய்ய சொல்வது தேவையற்றது என்றும், வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்யக் கூறுவதுதான் வன்கொடுமை என்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மூலம் எதிர்ப்புக் கிளம்பியது. அதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல், 'தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது' என கூறினார்.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பு கலந்த கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக அமைச்சர்கள் கமல் கருத்துக்கு கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருமையில் பேசி திட்டி வருகின்றனர்.

தமிழக அமைச்சர்கள்
இதற்கு நிதியமைச்சர் ஜெயக்குமார், 'கமல் பொத்தாம்பொதுவாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என பதில் அளித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கமலை 'அவன்' என ஒருமையில் விளித்து விமர்சித்தார்.

அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் சிவி சண்முகம். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கமல் பணத்துக்காக எதையும் செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.

பொன். ராதாகிருஷ்ணன்
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் கூறினார்.

வன்கொடுமை
நடிகர் கமலஹாசன் விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து பொறுப்பற்ற முறையில் உள்ளது என்று கூறினார். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை கமலை கைது செய்யக்கூறுவதுதான் வன் கொடுமை என்று கூறினார். சாதி கண்ணோட்டத்தில் இதனை பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராட்டிய பொன். ராதாகிருஷ்ணன்
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறிய கமல்ஹாசனை பாரட்டுவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். இப்போது கமலை கைது செய்ய வேண்டும் என்று கூறும் அமைச்சர்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications