எதிர்க்கட்சித் தலைவர் பதவி இழப்பு... விஜயகாந்த் பூரண விடுதலை அடைந்துவிட்டார்: பொன்.ராதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்ததன் மூலம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண விடுதலை அடைந்து விட்டதாக பாஜக மூத்தத்தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள், பாஜகவில் இணையும் நிகழ்ச்சி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

Pon.Radhakrishnan supports Vijayakanth

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்ததன் மூலம், பூரண விடுதலை அடைந்துவிட்டார். விஜயகாந்த் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டார். மூழ்கிய கப்பலுக்கு கேப்டனாக இருப்பதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். நமது கேட்பன் அவர்களும் அதற்கு விருப்பப்படமாட்டார் என்று கருதுகிறேன்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், நாட்டுக்கு நன்மை தரும் கூட்டணியில் அவர் இணைய வேண்டும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+