போரூர் கட்டட விபத்து.. மீட்புப் பணிகளைப் பார்வையட்டார் பொன். ராதா
Subscribe to Oneindia Tamil

அவருடன் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பாஜகவினரும் திரளாக வந்தனர். பொன். ராதாகிருஷ்ணன் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டடம் இடிந்து விழுந்து பலர் பலியான சம்பவம் துயரம் அளிக்கிறது. தகவல் அறிந்ததும் மீட்பு பணியை பார்வையிட வந்தேன்.
இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மீட்புப் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
கட்டட காண்டிராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு மத்திய படை அனுப்பப்படும். உயிரிழந்தோருக்கு, மாநில அரசுடன் ஆலோசித்து நிவாரணம் பற்றி மத்திய அரசு அறிவிக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications