தமிழக அரசுக்கு ஆள யோக்யதை இல்லை.. விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: பொன். ராதா எச்சரிக்கை
Recommended Video

சென்னை; தமிழக அரசுக்கு ஆள யோக்யதை இல்லை.. விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கூறினே. அப்போது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
99 நாட்களாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. 100-வது நாளில் வன்முறை ஏற்பட யார் காரணம்?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அவர்களைப் பொறுத்தவரை இது சோதனை ஓட்டம்தான். இன்னும் நிறைய நடக்கும்.
இவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஆள்வதற்கு தமிழக அரசுக்கு யோக்யதை இல்லை. ஆகையால் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications