5 நிமிடங்களில் விற்று தீர்ந்தது பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! பயணிகள் ஏமாற்றம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. முதல் ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக பயணம் செய்வோருக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. தற்போதைய நடைமுறைப்படி 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்யப்படலாம் என்பதால் புக்கிங் இன்று தொடங்கியது. சொந்த ஊர்களில் தமிழர் பண்டிகையை கொண்டாட செல்ல ஆசைப்பட்டு ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் 5 நிமிடங்களி்ல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
ஏனெனில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களில் அன்றைய தினத்துக்கான ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன.












Click it and Unblock the Notifications